deepamnews
இலங்கை

சரத் வீரசேகரனின் கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் பணி புறக்கணித்து கண்டன போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22:08:23 அன்று கௌரவ முல்லைதீவு நீதிபதி அவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம், நாளை 25.08.2023 காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டத்தை நடத்த ஏக மனதாக தீர்மானித்துள்ளது.

இந்த அடையாள புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச் சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் குறித்த அடையாள கண்டன போராட்டத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Related posts

போலி முட்டைகள் தொடர்பில் வெளியான தகவல் .

videodeepam

பாடசாலை சிற்றூண்டிச் சாலையில் ஐஸ் போதைப்பொருள் – பெண் கைது

videodeepam

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

videodeepam