deepamnews
சினிமா

பிரபல நடிகை திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கரமனா பகுதியில் வசித்துவந்தார் நடிகை அபர்ணா நாயர். 33 வயதான அவர், சினிமாவிலும் மலையாள டி.வி சீரியல்களிலும் நடித்துவந்தார். மேகதீர்த்தம், முத்துகெளவ், அச்சாயன்ஸ், கல்க்கி உள்ளிட்ட சினிமாக்களில் நடித்திருக்கிறார். மேலும், சந்தனமழை, ஆத்மசகி, மைதிலி மீண்டும் வருந்நூ, தேவஸ்பர்சம் உள்ளிட்ட டி.வி சீரியல்களில் நடித்துவந்தார். அவருக்கு சஞ்சித் என்ற கணவரும், த்ரியா, கிருத்திகா ஆகிய இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

நடிகை அபர்ணா நாயர் கரமனாவிலுள்ள வீட்டில் தாய், சகோதரி ஆகியோருடன் நேற்று இரவு இருந்தார். அந்த சமயத்தில் நடிகை அபர்ணா நாயரை சற்று நேரம் காணாததால் தாயும், சகோதரியும் அவரைத் தேடியிருக்கின்றனர். அப்போது அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். அதையடுத்து உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். இயற்கைக்கு மாறான மரணம் என கரமனா போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related posts

நா ரெடி தான் வரவா’ பாடலை பிரதமர் நரேந்திர மோடி பாடினால் எப்படி இருக்கும் ?கற்பனை செய்த ரசிகர்!!!

videodeepam

சைக்கோ போல் நடந்து கொள்கிறார் என விமர்சிக்கப்படும் பிரதீப்.

videodeepam

ஜெயிலர் படத்திற்கு இசையமைக்க அனிருத் வாங்கிய சம்பளம்..

videodeepam