deepamnews
இலங்கை

மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவத் தயார் – ஜனாதிபதி ரணில் அறிவிப்பு 

மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள், மாவட்டத்தின், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன், ஏனைய நிறுவனங்கள் அடங்கியதே மாவட்ட அபிவிருத்திச் சபையாகும்.

மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவுவதன் மூலம் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்றும், அதன்மூலம் பாரியளவான நிதியை சேமிக்க முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கஞ்சா பயிர்ச்செய்கைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் – டயானா கமகே தெரிவிப்பு.

videodeepam

இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் பரிசு அறிவிப்பு

videodeepam

புகையிரதத்தின் கழிவறையில் கைவிடப்பட்ட சிசுவின் பெற்றோர் கைது

videodeepam