deepamnews
இலங்கை

வரவு செலவு திட்டத்துக்கு எதிராக  இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கை

பாதீட்டை தோற்கடிக்க வலியுறுத்தித் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

துறைமுகம், சுகாதாரம், வர்த்தக வலயங்கள், எரிபொருள் கூட்டுத்தாபனம், நீர்ப்பாசனம், விருந்தகம் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் பதில் இணைப்பாளர் வசந்த சமரசிங்க, இந்த பாதீட்டினூடாக அரசாங்கம் பல்வேறு துறைகளை தனியார் மயப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதுடன் ஏனைய நாடுகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு சகல துறையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் பதில் இணைப்பாளர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பளை இத்தாவில் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!

videodeepam

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கமாக பாராளுமன்றம் இருக்க வேண்டும் – ஜனாதிபதி

videodeepam

தேசிய, சர்வதேச மட்டங்களில் அரசாங்கம் மோசமான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் – பீரிஸ் எச்சரிக்கை

videodeepam