deepamnews
சர்வதேசம்

ஒருதலைப்பட்ச போர் நிறுத்த அறிவிப்பின் பின்னர் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக யுக்ரைன் குற்றச்சாட்டு

ரஷ்யா, ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பு விடுத்த பின்னர், மீண்டும் யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பழைமைவாத நத்தார் பண்டிகையை முன்னிட்டு, நேற்று வெள்ளிக்கிழமை முதல 36 மணித்தியாலங்கள் போர் நிறுத்தம் செய்யதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று அறிவித்திருந்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர் ரஷ்யா இவ்வாறு போர் நிறுத்தத்தை அறிவித்தமை இதுவே முதல் தடவையாகும்.

எனினும், இந்த போர் நிறுத்தத்தை யுக்ரைன் நிராகரித்திருந்தது.

இந்நிலையில், யுக்ரைனின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள க்ராமடோர்க்ஸ்க் நகரில் ரஷ்யா நேற்று  இரு தடவைகள் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக யுக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

இஸ்ரேலில் வரலாறு காணாத மக்கள் போராட்டம் – பிரதமரின் அதிரடி திட்டம்

videodeepam

இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கியுள்ள  யேமனில் செயற்படும் ஹவுதி அமைப்பு.

videodeepam

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்தார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

videodeepam