வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 66 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை (5) காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிப் பிரதேசத்தின் முட்கொம்பன் சந்தை வீதியில் இடம் பெற்றது.
வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கிராம மக்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கள், இளைஞர்கள்,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கிராம மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் முன் வைத்தனர்.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-05-at-12.25.38-PM-1024x766.jpeg)
இளைஞர்கள்,பொது மக்கள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 66 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசத்தின் முட்கொம்பன் சந்தை வீதியில் இடம்பெற்றது.
குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.