deepamnews
இலங்கை

ஜெனிவாவில் இலங்கை இன்று கூனிக்குறுகி நிற்க ராஜபக்சக்களே முழுக்காரணம்

ஜெனிவாவில் இலங்கை இன்று கூனிக்குறுகி நிற்க ராஜபக்சக்களே முழுக்காரணம்” என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, ”இலங்கை மீதான ஜெனிவா தீர்மானங்களை தாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.  

இந்த அரசால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

ராஜபக்சக்களின் தான்தோன்றித்தனமான சில முடிவுகளால் நாடு இன்று படுகுழியில் விழுந்துள்ளது.

ராஜபக்சக்களின் சகாவான ரணில் விக்ரமசிங்கவால் நாட்டை மீட்டெடுக்க முடியாது. மக்கள் ஆணை மூலம் புதிய அரசை நிறுவினால்தான் நாட்டுக்கு விடிவு கிடைக்கும்” என்றார்.

Related posts

மாணவர்கள் பல்துறை சார்ந்தவர்களாக உருவாக வேண்டும் – அமைச்சின் செயலாளர் மகேசன் யாழில் தெரிவிப்பு

videodeepam

சந்திரிகாவின் தலைமையில் புதிய கூட்டணி: வெற்றிலைக்குப் பதிலாகக் கதிரைச் சின்னம்.

videodeepam

சங்கிலியுடன் ஆற்றில் பாய்ந்த திருடன் -ட்ரோன் உதவியுடன் தேடும் பொலிசார்!

videodeepam