deepamnews
இலங்கை

68 வது நாள் கவனயீர்ப்பு முல்லைத்தீவில் முன்னெடுப்பு

குறித்த 100 நாள் செயல் முனைவின் 68ம் நாள் போராட்டத்தில்  புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேவிபுரம்  பிரதேசத்தில் உள்ள  பெண்கள், ஆண்கள்,விவசாயிகள்,சிறு குழுக்கள் மற்றும் சிவில்  அமைப்பு  பிரதிநிதிகள்  என  பலர்  கலந்து கொண்டனர்.

‘வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ ‘ நாங்கள் நாட்டை துண்டாட வோ தனியரசோ கேட்கவில்லை.

இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் ‘ ‘ 

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு      ஜனநாயக உரிமையாகும் ‘ ‘ 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்க துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.

 பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை இல்லாதொழிப்போம்’ எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை,ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு  எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தை  கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.

Related posts

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெறும் போராட்டத்தில் பதற்றம்!

videodeepam

தொழிற்சங்க ஒன்றியத்தினரை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி – வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்    

videodeepam

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் – மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு.

videodeepam