deepamnews
இலங்கை

40 இலட்சம் குடும்பங்கள் நிவாரணம் கோருகின்றன – ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு

நாட்டில் உள்ள 68 இலட்சம் குடும்பங்களில் 40 இலட்சம் குடும்பங்கள் நிவாரணங்களை கோருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குவதற்கு வரி அறவிடுவதை விட வேறு வழிகள் இல்லை என அவர் இன்று ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

18 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் சமூர்த்தி உதவிகளை பெறுகின்றனர்.

4 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் அதிக குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் முதியோர் கொடுப்பனவை பெறுகின்றனர்.

இதுதவிர, விசேட தேவையுடையோர் மற்றும் ஏனைய நிவாரணங்களையும் பலர் பெறுகின்றனர்.

இதற்கு மேலதிகமாக புதிதாகவும் உள்வாங்கப்படவுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், வரி அறவிடுவதன் மூலமே அந்த கொடுப்பனவுகளை செலுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் முடிவு

videodeepam

நாளை நள்ளிரவு முதல் பால்மாவின் விலை மீண்டும் உயர்வு

videodeepam

ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக நாட்டுக்கு 46 பில்லியன் ரூபா நட்டம்.

videodeepam