deepamnews
இலங்கை

இ.போ.ச சபையின் வடபிராந்தியசாலை ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது

இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்திய சாலை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் இரண்டு மணியில் இருந்து போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகளின் வாக்குறுதிக்கமைய குறித்த போராட்டம் கைவிடப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Related posts

நல்லூர் ஆலய சூழல் வீதிகள் மாலையில் ஒரு மணி நேரம் மூடப்படும்!

videodeepam

கட்டில் தடுப்பில் சிக்கி 7 மாதக் குழந்தை உயிரிழப்பு.

videodeepam

கூரிய ஆயுதங்கள் சகிதம் கணவனால் கடத்தப்பட்ட மனைவி – குடத்தனையில் சம்பவம்!

videodeepam