deepamnews
இலங்கை

யாழ். சென்ற பேருந்து கிளிநொச்சியில் விபத்து – 23 பேருக்கு காயம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்று கிளிநொச்சி பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் இருந்த மாடுகளுடன் குறித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் எவருக்கும் பாரிய பாதிப்பு இல்லை என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

Related posts

கொழும்பு கோட்டைக்கும், மாலபேவுக்கும் இடையே இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிக்க ஆலோசனை

videodeepam

பெற்றோல் வாகன இறக்குமதிக்கு தடை – மின்சார கார்களை மட்டுமே அனுமதி என்கிறார் அமைச்சர் மனுச  

videodeepam

பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச நிதி மாநாட்டில் ஜனாதிபதி ரணில்  உரை –  நிதி நெருக்கடி தொடர்பில் அறிவிப்பு.

videodeepam