deepamnews
இலங்கை

நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை – குளிர் குறைவடையும் எனவும் அறிவிப்பு

தற்போதைய நாட்களில் கடுமையான குளிர் மற்றும் வளிமண்டலத்தில் அதிகரித்துள்ள தூசி துணிக்கைகளால் வைரஸ் காய்ச்சல், சுவாச நோய்கள் போன்றவை அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், நீண்டகால சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர் இந்த நேரத்தில் தங்கள் உடல் நலம் குறித்து அக்கறையுடன் இருக்க வேண்டும் என்றும்  தெரிவித்தார்.

இந்த நாட்களில் அஸ்துமாவுக்கு எடுக்கப்படும் மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என்றும், இன்ஹேலர் பயன்படுத்தும் நோயாளிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனையின் பேரில் அதையும் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

குளிர் மற்றும் தூசி துணிக்கைகள் அதிகம் உள்ள பகுதிகளில் குழந்தைகளை வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கு பொருத்தமான ஆடைகளை அணிவிப்பதும், பெரியவர்கள் முகக்கவசம் அணிவதும் முக்கியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

சிறு குழந்தைகளுக்கு வைரஸ் நோய்கள் விரைவாகப் பரவும் என்பதால், இருமல், காய்ச்சல், சளி போன்ற நோய் உள்ள குழந்தைகளை பாடசாலைகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

குளிர் காலத்தில் நோயாளிகள் உள்ள அறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு நல்ல ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நுவரெலியா போன்ற பிரதேசங்களில் உள்ள சிறுவர்களுக்கு இந்நிலை நன்கு தெரிந்திருந்தாலும், குளிருக்குப் பரிச்சயமில்லாத பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிக விரைவாக நோய்வாய்ப்படக்கூடும் என்றார்.

Related posts

பெற்றோலின் விலை 40 ரூபாவால் குறைப்பு

videodeepam

நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும்பாபிசேகம்.

videodeepam

நிதி ஒதுக்கீடு கிடைக்காததால் பள்ளிகளிலும் உணவு விநியோகம் நிறுத்தம்..?

videodeepam