deepamnews
சர்வதேசம்

ஒருதலைப்பட்ச போர் நிறுத்த அறிவிப்பின் பின்னர் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக யுக்ரைன் குற்றச்சாட்டு

ரஷ்யா, ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பு விடுத்த பின்னர், மீண்டும் யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பழைமைவாத நத்தார் பண்டிகையை முன்னிட்டு, நேற்று வெள்ளிக்கிழமை முதல 36 மணித்தியாலங்கள் போர் நிறுத்தம் செய்யதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று அறிவித்திருந்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர் ரஷ்யா இவ்வாறு போர் நிறுத்தத்தை அறிவித்தமை இதுவே முதல் தடவையாகும்.

எனினும், இந்த போர் நிறுத்தத்தை யுக்ரைன் நிராகரித்திருந்தது.

இந்நிலையில், யுக்ரைனின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள க்ராமடோர்க்ஸ்க் நகரில் ரஷ்யா நேற்று  இரு தடவைகள் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக யுக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு

videodeepam

அமெரிக்காவில் 22 பேர் சுட்டுக்கொலை பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

videodeepam

மெக்சிகோவுக்கான இலங்கை தூதுவராக மஹிந்த சமரசிங்க நற்சான்றிதழ் கையளிப்பு

videodeepam