இன்று கொண்டாடப்படும் தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆளும் கட்சியிலிருந்து சுயாதீன உறுப்பினர்களாக செயற்படும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினரும் இம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுடன் இணங்க முடியாது என்பதால், சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்ததாக டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.