deepamnews
இலங்கை

மருமகன் தாக்கி மாமியார் பலி, மனைவியின் நிலை கவலைக்கிடம் – வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் சம்பவம்

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு உள்ளாகி மாமியார் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் மனைவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், நேற்று இடம்பெற்றுள்ளது.  

இரண்டு பிள்ளைகளின் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நேற்றுக்காலை கடும்  வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.  அது முற்றியநிலையில் வீட்டில் இருந்த கோடரி மற்றும் கத்தியை கொண்டு கணவன்  மனைவிமீது தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதனைதடுக்க சென்ற மனைவியின் தாயார் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த மனைவியின் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மனைவி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பெரிய உலுக்குளம் பகுதியை சேர்ந்த டிபி அமராவதி (வயது 60), என்ற பெண் பலியானார், அவரது மகளான துலிகா ரத்தினசிறி (வயது 37) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

தாக்குதலை முன்னெடுத்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஸ்தலத்துக்கு விரைந்த உலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Related posts

கொரோனா தொற்று பரவல் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

videodeepam

திலினி பிரியமாலி சிறையிலிருந்து விடுதலை

videodeepam

அரசாங்கத்திற்கு சொந்தமான ஏழு அரச பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானம்

videodeepam