deepamnews
சர்வதேசம்

சூடான் இராணுவத்தினருக்கும் ஆயுதக் குழுவுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரம்

சூடான் இராணுவத்தினருக்கும் ஆயுதக் குழுவொன்றுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வருவதால் இருபத்தைந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகை, அரச தொலைக்காட்சி மற்றும் இராணுவத் தலைமையகம் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் மூன்று ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சூடானின் பல பகுதிகளில் வன்முறைச் செயல்கள் பதிவாகியுள்ளன.

2021 அக்டோபரில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, தற்போது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது.

இராணுவத் தலைவர் ஜெனரல் ஃபத்தர் அல்-புஹாரானுக்கு விசுவாசமான படைகளுக்கும் மற்றொரு குழுவிற்கும் இடையே மோதல் தொடங்கியது.

சூடான் இராணுவம் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவித்துள்ளதுடன், மோதல்கள் மேலும் தீவிரமடைந்து வருவதாக சமீபத்திய வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நியூசிலாந்து – ஒக்லாந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 3 பேர் பலி

videodeepam

புட்டினை கைது செய்யும் முயற்சி யுத்தத்திற்கான அழைப்பாக பார்க்கப்படும் – முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி எச்சரிக்கை

videodeepam

தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – உகாண்டாவில் புதிய சட்டம்

videodeepam