deepamnews
இலங்கை

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டமே தவிர சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல – சுகாஸ் தெரிவிப்பு

“யாழ். தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் தமிழரின் இருப்பிற்கான போராட்டமே தவிர பௌத்த மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல“ என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு  இன்று (6) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“தையிட்டி பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டிருக்கும் விகாரைக்கு எதிராக தமிழர் முன்னெடுக்கும் போராட்டமானது அவர்களின் வாழ் உரிமைக்கானது.

மாறாக இந்த போராட்டம் பௌத்த மதம் அல்லது சிங்கள மக்களிற்கு எதிரான போராட்டம் அல்ல.

எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தையும் நேர்மைத்தன்மையையும் சகோதர சிங்கள மக்கள் விளங்கிகொண்டு இந்த பௌத்த பேரினவாத அரசை இத்தகைய கட்டுமானங்களை அகற்றுமாறு அழுத்தம் கொடுப்பார்களாக இருந்தால் அது இந்த போராட்டத்தின் அடுத்தகட்ட பரிணாமமாக அமையும்“ என்றார். 

Related posts

சேலம் அருகே கூலமேட்டில் ஜல்லிக்கட்டு – சீறி பாய்ந்த 600 காளைகளை அடக்கிய 300 வீரர்கள்

videodeepam

வீட்டுக்குள் புகுந்த அரியவகை விலங்கு – முல்லைத்தீவு  கொக்குளாய் பகுதியில் சம்பவம்  

videodeepam

கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என எஸ். ஜெய்சங்கர் உறுதி

videodeepam