deepamnews
இலங்கை

கொழும்பில் மீண்டும் மாணவர் போராட்டம்: பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

தனியார் மருத்துவக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மருத்துவ பீட மாணவர்களின் ஒன்றியம் நேற்று கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

விஹாரமகாதேவி பூங்காவில் இருந்து எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேரணி ஹோர்ட்டன் பகுதிக்குள் பிரவேசித்த போது பொலிஸார் இடையூறு விளைவித்தனர்.

குறித்த பகுதியை கடந்து செல்லப்போவதில்லை எனவும், அப்பகுதியில் இருந்தவாறே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறிய போதிலும் பொலிஸார் அவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

இதனையடுத்து, மாணவர்கள் அங்கிருந்து எதிர்ப்பில் ஈடுபட்டதன் பின்னர் கலைந்து சென்றுள்ளனர்.

Related posts

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் மாத வருமானம் பெறுவோரும் வரி செலுத்த வேண்டும்

videodeepam

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணிலிடம் பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

videodeepam

மருந்துகளின் விலை குறைக்கப்படும் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

videodeepam