deepamnews
இலங்கை

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு.. இளைஞர் சமூகம் அவதானம்!

இளைஞர் சமூகம் மீண்டும் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பதைக் காணக் கூடும் என பால்வினை நோய்கள் தொடர்பான நிபுணரான வைத்தியர் திலானி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 1ஆம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

2018 முதல், 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர் சமூகத்தில் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.

2022 இல் புதிய எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களில் 73 பேர் இளைஞர்கள். அதாவது 12 சதவீதம் . அவர்களில் 66 பேர் ஆண்கள்.

எனவே, இளைஞர்களிடையே எச்.ஐ.வி. தடுப்பு மிகவும் முக்கியமானது. நம்பகமான துணையுடன் உடலுறவு கொள்ளுங்கள்.

பிற தொடர்புகள் இருந்தால் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆணுறையைப் பயன்படுத்துவது முக்கியம். எங்கள் நாடு முழுவதும் ஏற்கனவே 41 கிளினிக்குகள் இலவசமாக ஆணுறைகளை வழங்குகின்றன. எனவும் தெரிவித்தார்.

Related posts

20 நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாவில் நிறைவேறியது தீர்மானம்

videodeepam

வட்டி வீத அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்

videodeepam

பிரபல தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் 16 பேர் அதிரடியாக கைது!

videodeepam