deepamnews
இலங்கை

பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் ஜனாதிபதி – விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதாக குறிப்பிட்டுக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்துகிறார்.

ஐக்கிய தேசிய கட்சியை தஞ்சமடையச் செய்யும் நிலை பொதுஜன பெரமுனவுக்கு ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கடுவெல பகுதியில் நேற்று  காலை இடம்பெற்ற சுதந்திர மக்கள் சபை கூட்டணியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் விமல் வீரவன்ச இவ்வாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திட்டமிட்ட வகையில் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும். தேர்தலை பிற்போடும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது. மாறாக, தேர்தலை பிற்போடுவதாக குறிப்பிட்டுக்கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்துகிறார்.

இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும். பஷில் ராஜபக்ஷவின் படுதோல்வியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்கு நிதி ஒதுக்கினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 40 கோடி ரூபா செலவு செய்து 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட முடியுமாயின், ஏன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுமா? – சாணக்கியன்

videodeepam

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

videodeepam

நாணய நிதிய ஒப்பந்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய கோரிக்கை  

videodeepam