deepamnews
இலங்கை

22வது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்று

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

அது தொடர்பான விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று, 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு சமகி ஜன பலவேகய மற்றும் சமகி ஜன கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

எவ்வாறாயினும், தேவையற்ற திருத்தங்களைச் சேர்க்கும் எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் 22ஆவது திருத்தச் சட்டத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

Related posts

நெடுந்தீவு படுகொலையுடன் கடற்படைக்கும் இராணுவத்துக்கும்  தொடர்பு – ஆராய வேண்டும் என்கிறார் சிறிதரன்

videodeepam

மழை காரணமாக நீரில் மிதக்கின்றது அம்பாறை மாவட்டம்

videodeepam

அனர்த்தத்திற்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகளை தடுத்து வைக்க உத்தரவு

videodeepam