deepamnews
இந்தியா

நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் சிறையிலிருந்து  வெளியேறினர் – 31 வருட சிறைத்தண்டனைக்கு முடிவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் முருகனும், சாந்தனும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை புழல் சிறையில் ஜெயக்குமார், ராபர்ட் ஆகியோர் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள நளினியின் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு நேற்று முன்தினம் பிற்பகல் முதல் அதிகரிக்கப்பட்ட நிலையில் நளினி நேற்று பெண்கள் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்தே நளினி விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை சிறுமைப்படுத்த வேண்டாம் – சீமான் கோரிக்கை

videodeepam

இந்திய பிரதமர் மோடியின் வீட்டின் மேல் ஆளில்லா விமானம் பறந்தததால் பரபரப்பு.

videodeepam

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இந்திய மக்களவையும், மாநிலங்களவையும்,  சில மணித்தியாலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

videodeepam