deepamnews
இலங்கை

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதி

நாட்டின் பொருளாதார நிலையை எளிதாக்க அரசாங்கம் எடுத்துள்ள குறுகிய கால நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நிதி மற்றும் ஏனைய சீர்திருத்தங்கள் தொடர்பில் உலக வங்கியின் பணிப்பாளர் சியோ காந்தா உள்ளிட்ட குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடினர்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தொடர்ச்சியான நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களின் அவசியத்தை வலியுறுத்திய அவர்கள், கடன் மறுசீரமைப்பு திட்டம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கடன் தொகையான 2.9 பில்லியன் டொலர்கள் பெறப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர்.

Related posts

 IMF இன்  நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான உடன்படிக்கை விவாதம் இம்மாத இறுதியில்

videodeepam

யாழில் மோட்டார் சைக்கிளும் காரும் மோதி கோர விபத்து. இருவர் உயிரிழப்பு

videodeepam

கடந்த 24 மணித்தியாலங்களில் 185 பேர் விபத்துகளில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதி

videodeepam