deepamnews
இலங்கை

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதி

நாட்டின் பொருளாதார நிலையை எளிதாக்க அரசாங்கம் எடுத்துள்ள குறுகிய கால நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நிதி மற்றும் ஏனைய சீர்திருத்தங்கள் தொடர்பில் உலக வங்கியின் பணிப்பாளர் சியோ காந்தா உள்ளிட்ட குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடினர்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தொடர்ச்சியான நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களின் அவசியத்தை வலியுறுத்திய அவர்கள், கடன் மறுசீரமைப்பு திட்டம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கடன் தொகையான 2.9 பில்லியன் டொலர்கள் பெறப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர்.

Related posts

சிறந்த எதிர்காலத்திற்காக பாடுபடுவோம்: பிரதமர்

videodeepam

வாக்குச்சீட்டு அச்சுப் பணிகளுக்கான நிதி தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதம்

videodeepam

ஹிக்கடுவையில் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் பெண் ஒருவர் கைது

videodeepam