deepamnews
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்காமைக்கான பொறுப்பை தனிப்பட்ட ரீதியில் ஏற்க முடியாது – மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்காமைக்கான பொறுப்பை தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

தாம் தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இல்லாத காரணத்தினால் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கெதிராக அன்றி அரசாங்கத்திற்கு எதிராக வழக்கை தொடர்ந்து நஷ்டஈடு கோர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் பிரதிவாதி பட்டியலிலிருந்து தம்மை நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவினால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பிற்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related posts

நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைப்பு – யாழில் வெடித்தது போராட்டம்

videodeepam

வெசாக் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் பூட்டு

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

videodeepam