deepamnews
இந்தியா

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் அறிவியலுக்கான பார்வை சுட்டிக்காட்டினார் பிரதமர் மோடி

அடுத்த 25 ஆண்டுகளுக்கான அறிவியலுக்கான தொலைநோக்கு பார்வையை பிரதமர் நரேந்திர மோடி கோடிட்டுக் காட்டியுள்ளார். இதனை மையப்படுத்தி நாட்டை தன்னிறைவு பெறச் செய்ய ஆராய்ச்சியாளர்களை வலியுறுத்தினார்.

நாக்பூரில் 108ஆவது இந்திய அறிவியல் காங்கிரஸைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, விஞ்ஞான செயல்முறைகளை வலுப்படுத்துதல், தொழில்நுட்பங்கள், தரவு அறிவியல், புதிய தடுப்பூசிகளின் வளர்ச்சி, புதிய நோய்களைக் கண்காணிப்பதற்கான முயற்சிகளை மேம்படுத்தல் மற்றும் இளைஞர்களை ஊக்குவிப்பது போன்றவற்றை வலியுறுத்தினார்.

அறிவியல் முயற்சிகள் ஆய்வகத்திலிருந்து வெளியில் வந்து பயன்படும் போது மாத்திரமே பெரிய சாதனைகளாக மாறும் என்றும் கூறினார். மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜிதேந்திர சிங், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் முன்னிலையில் ராஷ்டிரசந்த் துக்டோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஐந்து நாள் இந்திய அறிவியல் மாநாடு தொடங்கப்பட்டது.

இளைஞர்களை அறிவியலுக்கு ஈர்ப்பதற்காக திறமைகள் மற்றும் வெற்றிகளைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பு மற்றும் வழிகாட்டி அமைப்பை உருவாக்குவதற்கான வலுவான ஆடுகளத்தையும் பிரதமர் உருவாக்கினார். ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்  செயலிகளுக்கான வாய்ப்புகளை அவர் எடுத்துரைத்தார்.

செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற பாடங்களை அவர்களின் முன்னுரிமை பட்டியலில் சேர்க்குமாறும், குறைக்கடத்திகள் துறையில் புதுமைகளைக் கொண்டு வருமாறும் பிரதமர் ஆராய்ச்சியாளர்களை இதன் போது வலியுறுத்தினார்.

உலக மக்கள் தொகையில் 17 முதல் 18 சதவீதம் பேர் வசிப்பது இந்தியாவில் என்பதால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களின் முன்னேற்றம் உலக முன்னேற்றத்திலும் எழுச்சிக்கு வழிவகுக்கும் என்றார்.

இந்தியா முன்னேற்றத்திற்கு அறிவியல் வழிகளைப் பயன்படுத்துகிறது. அதன் விளைவுகள் தெரியும். 130 நாடுகளின் பட்டியலில் 2015 இல் 81ஆவது இடத்தில் இருந்த இந்தியா உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 40ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இன்று புதிய நோய்களின் அச்சுறுத்தலை மனிதகுலம் எதிர்கொண்டுள்ள அத்தகைய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு மூலம் சரியான நேரத்தில் நோய்களைக் கண்டறிந்து அவற்றை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இலக்கை அடைய பல்வேறு அமைச்சகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். புதிய தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Related posts

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது வளர்ந்த நாடாக மாறும் -நரேந்திர மோடி தெரிவிப்பு.

videodeepam

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் – என்னை ஆதரிக்க வேண்டும் என்கிறார் சீமான்

videodeepam

இந்தியாவை உலுக்கிய கோர விபத்து! குழந்தை உட்பட 11 பேர் பலி

videodeepam