deepamnews
இந்தியா

கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின், இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 221 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்களின் தொடர் கைது நடவடிக்கையானது கடற்றொழிலை மாத்திரம் நம்பியுள்ள தமிழக மீனவ சமூகத்திற்கு கடும் மன அழுதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மீனவ சமூகத்திற்கு அரசின் ஆதரவு தேவைப்படுவதாகவும் முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் 105 படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Related posts

சிற்றூந்தில் தொங்கியப்படி சென்ற இந்திய பிரதமர் மோடி- காவல்துறையில் முறைப்பாடு  

videodeepam

ஆளுநருக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டத்தை பாமக நடத்தும் – அன்புமணி ராமதாஸ் தெரிவிப்பு

videodeepam

மாண்டஸ் புயல் தாக்கத்தால் தமிழகத்தில் 5 பேர் உயிரிழப்பு –  163 குடிசைகள், 69 படகுகள் சேதம்

videodeepam