deepamnews
இலங்கை

இலங்கையர்கள் உள்ளிட்ட 27 சட்டவிரோத குடியேற்றவாசிகள் ரோமானிய எல்லையில் கைது

ஹங்கேரிக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் உள்ளிட்ட 27  சட்டவிரோத குடியேற்றவாசிகள் ரோமானிய எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், எரித்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடைகள், இரும்பு போன்றவற்றை ஏற்றிச்சென்ற இரண்டு ட்ரக் வண்டிகளை சோதனையிட்டபோது, அவர்கள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்  தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் 21 முதல் 67 வயதிற்கு உட்பட்டவர்கள் அடங்குகின்றனர். 

Related posts

அரசாங்கம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இனி பேச்சுவார்த்தை இல்லை – தமிழ் கட்சிகள் தீர்மானம்

videodeepam

ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 20 பேர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதி !

videodeepam

சீரற்ற காலநிலை தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்

videodeepam